
பன்னாட்டு அரச சார்பற்ற அமைப்புக்கள் தமிழ் மக்களையும், அவர்களது பிரச்சினைகளையும், ஓரங்கட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
தமிழ் மக்களின் பிரச்சனைகளைக் கையிலெடுத்து, பணம் சம்பாதிக்கும் அரச சார்பற்ற அமைப்புகள், அவர்களின் பிரச்சினைகளை முறையாக அணுகாது தவிர்த்து வருகின்றன.
சிறீலங்கா அரசின் போர்க்குற்றம் பற்றியும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் அடிக்கடி அறிக்கை வெளியிடும் பன்னாட்டு மன்னிப்புச் சபை, மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றன, தமிழர்களின் பிரச்சினையை முறையாக அணுகத் தவறி வருகின்றன.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறும் தமது கூட்டங்களில், தமிழர்கள் என்ற சொற் பிரயோகத்தைத் தவிர்த்து, தமிழர்களின் அபிலாசைகளை வலியுறுத்தாது, “இடம்பெயர்ந்த மக்கள்” என்ற சொற் பதங்களை மட்டும் அவை பாவித்து வருகின்றன.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள், அரச சார்பற்ற நிறுவனங்கள் தமிழ் மக்கள் என்ற சொற் பிரயோகத்தையே பாவிப்பதை தவிர்க்க ஆரம்பித்திருப்பதால், தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அத்துடன், இவ்வாறான அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், சிறீலங்கா அரசுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை எனவும் சுட்டடிக்காட்டப்படுகின்றது.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபையின் 11வது கூட்டத்தொடரில் பங்கு பற்றிவரும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சிறிலங்காவின் மனித உரிமை பற்றி ஆராய்வதற்காக நேற்று இரண்டு கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.
ஜெனிவாவை தளமாக கொண்டு இயங்கும் ‘சர்வதேச சர்வ நம்பிக்கைக்கான அமைப்பும்’ தமிழ் மக்களின் விடயத்தை சிறப்பாக அணுகியிருந்தது.
மற்றொரு கூட்டத்தை பிரித்தானியவை தளமாக கொண்டு இயங்கும் ‘பன்னாட்டு மன்னிப்புச் சபை” கூட்டியிருந்த பேதிலும், தமிழர்கள் என்ற சொற் பிரயோகம் பாவிக்கப்படாது, தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியும் ஆராயாது, ஏற்கனவே இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி மட்டுமே பேசியுள்ளன.
நன்றி : www.paristamil.com
No comments:
Post a Comment