1967 ஆம் ஆண்டு அண்ணா சட்டமன்றத்தில் சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட ஏற்பு வழங்கினார். அதற்கான மசோதா சட்டமாகும் முன்பு, தந்தை பெரியார் பார்வைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவைப் படித்த பெரியார், “மாலை மாற்றி தாலி கட்ட வேண்டும்” என்று மசோதாவில் இடம் பெற்றிருந்த பிரிவை சுட்டிக்காட்டி, “தாலியை கட்டாயமாக்கத் தேவையில்லை” என்று, ஆலோசனை வழங்கினார். முதல்வர் அண்ணாவும் மசோதாவில் தாம் கவனியாது விட்ட பிழையை பெரியார் கண்டுபிடித்து விட்டதைப் பாராட்டி, மகிழ்ந்து திருத்தத்தை ஏற்றுக் கொண்டார்.
ஆனால், ‘திராவிட’ கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வீட்டுத் திருமணங்கள்கூட தாலியுடன்தான் நடந்து வருகின்றன. தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், கலைஞர் பங்கேற்றபோது, மேடையில் திராவிடர் கழகத் தம்பியினர் அடிமைச் சின்னமான தாலியை அகற்றி, மேடையிலிருந்த கலைஞரிடம் தந்தபோது, அதை கையில் வாங்கிக் கொள்ளவே கலைஞர் மறுத்தார். தாலி - பெண்ணடிமையின் சின்னம் என்பதைவிட, தமிழர் பண்பாடு என்று ‘தமிழ்’ உணர்வாளர்கள் என்றே பலராலும் போற்றப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை, கடந்த ஜூலை 17 ஆம் தேதி அளித்த ஒரு தீர்ப்பில், திருமணம் தாலி கட்டாமலே சட்டப்படி செல்லும். மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், இத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 1987 ஆம் ஆண்டு கோயில் ஒன்றில் காதலர்களான மாலதி-நாராயணன், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 1988 இல் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர். தாலி கட்டாததால் திருமணம் செல்லாது என்பது கணவன் தரப்பு வாதம். மாலதி - இதை எதிர்த்து வழக்கை நடத்தினார். 1994 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த - கீழ் நீதிமன்றம், தாலி கட்டாமலே, மாலை மாற்றினாலே திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. மணமகன், உயர்நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்; உயர்நீதிமன்றமும் 21 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
Sunday, August 16, 2009
ஒரு விசித்திரத் தீர்ப்பு - குமுதம், 24-6-2009 ஓ பக்கங்களில்.... ஞாநி
இந்தியத் தேசியக் கொடியை எரிக்க முயன்று கைதான தமிழ்த் தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்களை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு விசித்திரமான நிபந்தனை விதித்திருக்கிறார். இந்த உத்தரவை ....தனமான உத்தரவு என்றுதான் சொல்ல வேண்டும். (நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்ல முடியாத ஒரு வார்த்தையை அங்கே நீங்களே நிரப்பிக் கொள்ளலாம்.)
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வீட்டு முன்னால் ஒரு கொடிக் கம்பம் நட்டு, ஒரு வாரத்துக்கு தினசரி காலை 6 மணிக்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றி மாலை 6 மணிக்கு அதை இறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. கொடியை ஏற்றியதும் சல்யூட் அடிக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறிப்பிடப்பட வில்லை.
தேசியக் கொடியின் புனிதம், மாட்சிமை பற்றியெல்லாம் குற்றவாளிகள் உணர வேண்டும் என்று நீதிபதி விரும்யவபியதால் இவ்வாறு நிபந்தனை விதித்திருப்பதாகத் தெரிகிறது. நீதிபதிகளுக்கு இன்னும் ஆழமான அரசியல் அறிவு தேவைப்படுகிறது. இந்தியக் கொடியை எரிக்க முற்படும் ஒரு தமிழ் தேசியர் என்பவர், இந்திய தேசியத்தையே ஏற்காதவர். அவரை ஒரு வருடம் தினசரி கொடி ஏற்றச் சொன்னாலும் அந்தக் கொடி மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் வந்துவிடப் போவதில்லை. அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்தால், தொடர்ந்து இந்திய தேசிய எதிர்ப்பாளராகத்தான் இருப்பார். ஒவ்வொரு முறை கொடியை ஏற்றும்போதும் மனசுக்குள் அதை அவர் திட்டிக்கொண்டே கூட இருக்க முடியும். அதை எந்த நீதிபதியும் கண்டுபிடித்து தண்டனை விதிக்கவே முடியாது.
தினசரி இந்த எட்டு தமிழ் தேசியர்களும் கொடி ஏற்றுவதை போலீஸ் கண்காணிக்க வேண்டும் என்று வேறு உத்தரவு. அதாவது காலை 6 மணிக்கு எட்டுப் பேர் வீட்டுக்கும் எட்டு போலீசார் போக வேண்டும். திரும்ப மாலை 6 மணிக்கும் போக வேண்டும். அரசு ஊழியர்களின் நேரம் சக்தி, சம்பளம் எப்படியெப்படியெல்லாம் வீணாக்கப்படுகின்றது பாருங்கள். ஜாமீன் கொடுப்பதற்கு இந்த மாதிரி நிபந்தனைகள் எல்லாம் விதிக்க எந்த சட்டப்பிரிவு, நீதிபதிக்கு அதிகாரம் தருகிறது என்று யாராவது சட்ட வல்லுநர்தான் விளக்க வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வீட்டு முன்னால் ஒரு கொடிக் கம்பம் நட்டு, ஒரு வாரத்துக்கு தினசரி காலை 6 மணிக்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றி மாலை 6 மணிக்கு அதை இறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. கொடியை ஏற்றியதும் சல்யூட் அடிக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறிப்பிடப்பட வில்லை.
தேசியக் கொடியின் புனிதம், மாட்சிமை பற்றியெல்லாம் குற்றவாளிகள் உணர வேண்டும் என்று நீதிபதி விரும்யவபியதால் இவ்வாறு நிபந்தனை விதித்திருப்பதாகத் தெரிகிறது. நீதிபதிகளுக்கு இன்னும் ஆழமான அரசியல் அறிவு தேவைப்படுகிறது. இந்தியக் கொடியை எரிக்க முற்படும் ஒரு தமிழ் தேசியர் என்பவர், இந்திய தேசியத்தையே ஏற்காதவர். அவரை ஒரு வருடம் தினசரி கொடி ஏற்றச் சொன்னாலும் அந்தக் கொடி மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் வந்துவிடப் போவதில்லை. அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்தால், தொடர்ந்து இந்திய தேசிய எதிர்ப்பாளராகத்தான் இருப்பார். ஒவ்வொரு முறை கொடியை ஏற்றும்போதும் மனசுக்குள் அதை அவர் திட்டிக்கொண்டே கூட இருக்க முடியும். அதை எந்த நீதிபதியும் கண்டுபிடித்து தண்டனை விதிக்கவே முடியாது.
தினசரி இந்த எட்டு தமிழ் தேசியர்களும் கொடி ஏற்றுவதை போலீஸ் கண்காணிக்க வேண்டும் என்று வேறு உத்தரவு. அதாவது காலை 6 மணிக்கு எட்டுப் பேர் வீட்டுக்கும் எட்டு போலீசார் போக வேண்டும். திரும்ப மாலை 6 மணிக்கும் போக வேண்டும். அரசு ஊழியர்களின் நேரம் சக்தி, சம்பளம் எப்படியெப்படியெல்லாம் வீணாக்கப்படுகின்றது பாருங்கள். ஜாமீன் கொடுப்பதற்கு இந்த மாதிரி நிபந்தனைகள் எல்லாம் விதிக்க எந்த சட்டப்பிரிவு, நீதிபதிக்கு அதிகாரம் தருகிறது என்று யாராவது சட்ட வல்லுநர்தான் விளக்க வேண்டும்.
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் இலங்கை இனப்படுகொலை அம்பலம்
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது.
தமிழ் இளைஞர்கள் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதைக்குள் உள்ளாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் தரைவெளி ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பின்னர் சிறீலங்காப் படையினர் குறிந்த இளைஞர்களைக் கேலி செய்து சிரிப்பதோடு, மூடுகாலணிகளால் உதைந்து அவர்களைக் சுட்டுச் கொன்றுள்ளனர்.
காணொளியில் ஒன்பது இளைஞர்களை சிறீலங்காப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இப்படுகொலைக் காணொளியானது சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
Subscribe to:
Comments (Atom)